பறந்து வந்த பந்தை பாய்ந்து பிடித்த சூர்யகுமார்
2023-02-02@ 16:46:24

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரின் 5 வது பந்தில் பின் ஆலென் அடிக்க, பந்து பேட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்ற சூர்யகுமார் யாதவ்விற்கு மேல் பறந்து சென்றது. ஆனால், பந்து வருவதை அறிந்த சூர்யகுமார் யாதவ் அதை பறந்து பிடித்தார். அதே போன்று ஹர்திக் பாண்டியா வீசிய 3வது ஓவரின் 4வது பந்தில் கிளென் பிலிப்ஸ் ஸ்லிப்பில் நின்ற சூர்யகுமார் யாதவ் பக்கமாக பந்தை அடிக்க, அது அவர் இருக்கும் உயரத்திற்கு மேல் சென்றது. இருந்தாலும், அசால்ட்டாக பறந்து பந்தை பிடித்து அசத்தினார்.
அதோடு, ஷிவம் மாவி வீசிய 8.3 வது ஓவரில், சான்ட்னர் சிக்சர் அடிக்க, அந்த பந்தை பவுண்டரி லைனில் நின்றுகொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் அபாரமாக பிடித்தார். இப்படி ஒரே போட்டியில் பீல்டிங்கில் மாஸ் காட்டிய அவருக்கு ரசிகர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யகுமார் பிடித்த இந்த கேட்ச் வீடியோ, சமூகவலை தளங்களில் வைரலானது.
மேலும் செய்திகள்
உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மங்கோலியாவை வீழ்த்தி இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்றார்
நெருக்கடியிலிருந்து சூர்யகுமார் மீண்டு வருவார்: சல்மான்பட் நம்பிக்கை
டி.20 போட்டியில் முதன்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கன் அசத்தல் வெற்றி
உ.பி.யை வீழ்த்தி பைனலுக்கு தகுதி எங்களிடம் சிறப்பான பந்துவீச்சு தாக்குதல் உள்ளது: மும்பை கேப்டன் கவுர் பேட்டி
மெஸ்ஸி 800
ரொனால்டோ உலக சாதனை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி