உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
2023-02-02@ 01:39:23

அம்பத்தூர்: கோயில் கடையை உள்வாடகைக்கு விட்டதால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. வில்லிவாக்கத்தில் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் மேற்குமாடவீதியில் 13767 சதுர அடியும் ராஜா தெருவில் 2200 சதுர அடியும், ரெட்டி தெருவில் 5424 சதுர அடி, சென்னை, திருவள்ளூர் நெடுஞ்சாலையில் 1275 சதுரஅடி என மொத்தம் 22,666 சதுர அடியில் மனைகள் உள்ளன.
இதில் உள்ள கடைகள் 5 பேருக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. ஆனால், வாடகைக்கு எடுத்தவர்கள் முறையாக வாடகை செலுத்தவில்லை. கோயில் சார்பில் வழங்கிய நிலத்தை உள்வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, சென்னை மண்டலம்-2 அதிகாரிகளின் உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட கடை நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 கோடி என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
வேளாண் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது; மக்கள் பதற்றப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்க்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு!
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நிதி ஆயோக் தலைவர், குழுவினர் சந்திப்பு..!!
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!