கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2023-02-02@ 01:38:36

பெரம்பூர்: குஜராத்தில் 2002ல் நடந்த கலவரம் தொடர்பாக, இங்கிலாந்தை சேர்ந்த பிபிசி நிறுவனம், இந்தியா மோடிக்கான கேள்விகள் என்னும் ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தது. இதை இந்தியாவில் திரையிடக்கூடாது என்பதற்காக ஒன்றிய அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்து வருகிறது. இந்நிலையில், அரசியலமைப்பு சட்டம் வழங்கிய, கருத்து உரிமையை பறிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம், பிபிசி ஆவணப்படத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்போம் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் சிஐடியுவின் சார்பில், அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் சந்திப்பு முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வில்லிவாக்கம் பகுதி செயலாளர் யூஜன் தலைமை தாங்கினார். சென்னை மாநகராட்சி 98வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரியதர்ஷினி பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில், 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியும், பிபிசி ஆவணப்படத்திற்கான க்யூஆர் கோடு அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம், சிஐடியு மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது; மக்கள் பதற்றப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்க்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு!
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நிதி ஆயோக் தலைவர், குழுவினர் சந்திப்பு..!!
உகாதி திருநாள் புத்தாண்டை, நாளை கொண்டாடும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
காவல் துறை ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு முகாம்: போலீசாரின் வாரிசுகள் 123 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை!
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!