கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் உயர்ந்தது
2023-02-02@ 01:36:00

திண்டுக்கல்: கொடைக்கானல் நகராட்சி பகுதியில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து திண்டுக்கல் கலெக்டர் விசாகன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சி எல்லைக்குள் நுழையும் வாகனங்களுக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி அருகிலுள்ள மையத்தில் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு பிப். 1 (நேற்று) முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, (அடைப்பிற்குள் பழைய கட்டணம்) சுற்றுலா பஸ் ரூ.250 (200), பஸ் ரூ.150 (100), லாரி (கனரக வாகனங்கள்) ரூ.100 (80), வேன், மினி லாரி, டிராக்டர் ரூ.80 (70), சுற்றுலா சிற்றுந்து, வாடகை கார்கள் ரூ.60 (50), சொந்த பயன்பாட்டு கார், ஜீப் ரூ.60 (50) என உயர்த்தப்பட்டுள்ளது. மூன்று சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை. மேலும் கொடைக்கானல் தாலுகாவிற்குட்பட்ட அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்கக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் உரிய ஆவணங்களை நகராட்சியில் சமர்ப்பித்து இலவச அனுமதி பெற்று கொள்ளலாம். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
தமிழக அரசியல் களத்தை பாஜக மாற்றிவிட்டது.! பாஜகவிற்கு கூண்டுக்குள் இருந்து, வெளியே வரும் நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை பேச்சு
கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
நாட்றம்பள்ளி தாலுகாவில் குறவர் இன மக்களுக்கு ஜாதி சான்று வழங்க வேண்டும்-தாசில்தாரிடம் மனு
திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் அணையில் ₹5.97 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்-கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு
ஜோலார்பேட்டை அருகே அடிக்கடி ரயில்வே கேட் மூடுவதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி-மேம்பாலம் அமைக்க கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைக்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து நல்வழிப்படுத்த வேண்டும்-கல்லூரி முதல்வர்களுக்கு எஸ்பி அறிவுரை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி