SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்

2023-02-02@ 01:31:52

அண்ணாநகர்: சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் 8வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி மற்றும் உரிமம் கட்டுவதற்கு காலம் தாழ்த்தி வந்த கடைகளை கண்டறிந்து வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்து எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில், நேற்று அண்ணாநகர் 8வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமம் மற்றும் சொத்துவரி கட்ட தவறிய 15க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க வருவாய்த்துறை அதிகாரி ரவிசந்திரன் தலைமையில் அதிகாரிகள் சென்றனர். அப்போது, அதிகாரிகளை பார்த்ததும் சுமார் 10 கடைகள் உரிமத்தொகை கட்டுவதற்கு முன்வந்ததால் அந்த கடைகளை தவிர, மற்ற 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பிறகு  கடையின் இரும்பு ஷட்டர் மீது எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அண்ணா நகர் 8வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சொத்துவரி மற்றும் உரிமம் செலுத்த கட்ட தவறிய கடைகளை கணக்கெடுத்து வருகிறோம். அதில் சொத்துவரி மற்றும் உரிமை கட்ட தவறிய கடைகளை சீல்வைக்கும் நடவடிக்கை தொடரும்’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்