குடிநீர் தொட்டியில் இன்ஜினியர் சடலம் மீட்பு அமைச்சர், டிஐஜி நேரில் விசாரணை
2023-02-02@ 01:11:24

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே ராஜேந்திரபட்டினத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன், முன்னாள் ஊராட்சி தலைவர். இவரது 3வது மகன் சரவணக்குமார் (34). சிவில் இன்ஜினியர். கடந்த 24ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் விநியோகிக்கும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்குள்ள மேல்நிலை தொட்டியை பார்த்தபோது அதில் சரவணகுமார் சடலமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து சரவணக்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, மேல்நிலை குடிநீர் தொட்டியில் உள்ள குடிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தி பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் சம்பவம் நடந்த கிராமத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் சுத்தமான குடிநீர் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இன்ஜினியர் சரவணகுமார் குடும்பத்திற்கு நிவாரண நிதியையும் அமைச்சர் வழங்கினார். விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் எஸ்பி சக்தி கணேசன் உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனர்.
மேலும் செய்திகள்
தமிழக அரசியல் களத்தை பாஜக மாற்றிவிட்டது.! பாஜகவிற்கு கூண்டுக்குள் இருந்து, வெளியே வரும் நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை பேச்சு
கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
நாட்றம்பள்ளி தாலுகாவில் குறவர் இன மக்களுக்கு ஜாதி சான்று வழங்க வேண்டும்-தாசில்தாரிடம் மனு
திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் அணையில் ₹5.97 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்-கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு
ஜோலார்பேட்டை அருகே அடிக்கடி ரயில்வே கேட் மூடுவதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி-மேம்பாலம் அமைக்க கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைக்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து நல்வழிப்படுத்த வேண்டும்-கல்லூரி முதல்வர்களுக்கு எஸ்பி அறிவுரை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி