SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிசம்பரில் வருகிறது ஹைட்ரஜன் ரயில்

2023-02-02@ 01:01:23

புதுடெல்லி: ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: ரயில்வேக்கு ரூ.2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது ஒரு பெரிய மாற்றம். அது பயணிகளின் தேவைகளை நிறைவேற்றும். வந்தே பாரத் ரயில்கள், சென்னை ஐ.சி.எப். மட்டுமின்றி இனி அரியானாவின் சோனிபத், மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் நகரங்களிலும் உற்பத்தி செய்யப்படும்.

இதனால், வந்தே பாரத் ரயில்களை கொண்டு நாட்டின் ஒவ்வொரு மூலையையும் இணைக்கும் பிரதமர் மோடியின் கனவு பூர்த்தியாவதற்கு வகை செய்யும். உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, தயாரான ஹைட்ரஜன் ரயில்  டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும். முதலில்  கல்கா-ஷிம்லா போன்ற பாரம்பரிய பகுதிகளில் இயக்கப்படும். பின்னர் இந்த ரயில் சேவை பிற இடங்களுக்கு விரிவுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்