SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மசூதி குண்டுவெடிப்பில் 100 பேர் பலி: இந்தியாவில் கூட இப்படி நடப்பதில்லை! பாகிஸ்தான் அமைச்சர் வேதனை

2023-02-01@ 18:26:06

இஸ்லாமாபாத்: இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் கூட  தொழுகையின் போது முஸ்லீம்கள் கொல்லப்படுவதில்லை என்று பாகிஸ்தான் அமைச்சர் வேதனையுடன் கூறினார். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதிக்குள் நேற்று முன்தினம் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் கூறுகையில், ‘இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் கூட  தொழுகையின் போது முஸ்லீம்கள் கொல்லப்படுவதில்லை;

ஆனால் பாகிஸ்தானில் நடக்கிறது. நாட்டை ஒழுங்கமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மசூதிக்குள் தற்கொலை குண்டுவெடிப்பு நடத்திய ஜுஹ்ர், தொழுகையின் போது முன்வரிசையில் நின்றிருந்தான். இந்த கோர சம்பவம் நடந்த இடத்திற்கு பிரதமரும், ராணுவத் தளபதியும் நேரில் சென்று பார்வையிட்டனர். அதிகம் பேசவிரும்பவில்லை. ஆனால் பயங்கரவாதத்திற்கு விதைகளை நாம் விதைத்தோம் என்பதை என்னால் கூறமுடியும்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்