ஈரோட்டில் அண்ணன், தம்பி கொலையில் தாய்மாமன் உள்பட 2 பேர் கைது
2023-02-01@ 17:47:36

ஈரோடு: ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி மற்றும் அவரது சகோதரர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர்களது தாய்மாமன் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடுமுனிசிபல் காலனியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி பொருளாளர் கார்த்திக் மற்றும் அவருடைய சகோதரர் கெளதம் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர்.
அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலையில் வழக்கு பதிவு செய்து ஈரோடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கொலைசெய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் தாய்மாமன் ஆறுமுகசாமி மற்றும் உறவினர் கவின் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் சொத்து பிரச்சனையில் இந்த கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த அன்று இளைஞர்களின் வீட்டுக்கு சென்று ஆறுமுகசாமி மற்றும் கவின் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் கார்த்திக் மற்றும் கெளதமை கத்தியால் குத்தி ஆறுமுகசாமி கொலை செய்தார் என்று கூறப்படுகிறது. உடன் சென்ற கவினிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
காமெடி நடிகர் கோவை குணா மறைவு
பல்லாவரம் நகராட்சி வழக்கு தொடர்பாக ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு விசைத்தறி முதலாளிகளுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்தை
பூந்தமல்லியில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு
தடை செய்யப்பட்டவைகளுக்கு பதிலாக மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகள்: மாவட்ட கலெக்டர் தகவல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!