ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குறித்து இன்று மாலை அறிவிப்பு
2023-02-01@ 15:19:49

சென்னை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளரை இன்று மாலை ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கவுள்ளதாக வைத்தியலிங்கம் அறிவித்துள்ளார். சென்னையில் ஆலோசனை கூட்டத்துக்கு பின் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த வைத்தியலிங்கம் அளித்த பேட்டியில்; பழனிச்சாமி தரப்பில் காலை வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை தங்கள் வேட்பாளரை பன்னீர்செல்வம் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. பல்வேறு கட்சினரும், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்காததாலும், இரட்டை இலை சின்னம் பிரச்சனையாலும் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் தங்கள் தரப்பு வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தனர். நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியதை அடுத்து இன்று காலை ஈபிஎஸ் அணியினர் தங்கள் தரப்பு வேட்பாளராக ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று மாலை வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
வேளாண் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது; மக்கள் பதற்றப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்க்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு!
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நிதி ஆயோக் தலைவர், குழுவினர் சந்திப்பு..!!
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!