மத்திய பிரதேசம் மது கடைகளில் கோசாலைகளை தொடங்க போகிறேன்: உமா பாரதி ஆவேசம்
2023-02-01@ 14:17:21

போபால்: மத்திய பிரதேசத்தில் புதிய மது கொள்கையை விரைவில் அறிவிக்காவிட்டால் மது கடைகளில் கோசாலைகளை தொடங்குவேன் என பா.ஜ.க.வை சேர்ந்த உமா பாரதி ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், போபால் நகரில் அயோத்தியா நகர் பகுதியில் உள்ள அனுமன் மற்றும் துர்கா கோவிலுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் முதல் மந்திரியான உமா பாரதி சென்றுள்ளார்.
கோவிலுக்கு முன்னால் மதுக்கடை ஒன்று அமைந்து உள்ளது, இதுபற்றி உமா பாரதி கூறும்போது, அழிக்கப்பட வேண்டிய ஒன்று மது கடை முன்னால் உள்ளது. ஆட்சி அதிகாரம் பெறுவதற்கான காரணியாக உள்ள ஒன்று பின்னால் கோவில் உள்ளது என கூறியுள்ளார். கோவிலுக்கு முன்னால் மது கடையும், பாரும் உள்ளது என ஆவேசத்துடன் அவர் கூறினார்.
முதல் மந்திரி என்னிடம் ஜனவரி 31ம் தேதிக்குள் புதிய மது கொள்கை அறிவிக்கப்படும் என கூறினார். அந்த கொள்கைக்காக நான் இன்னும் காத்து கொண்டிருக்க முடியாது. மதுக்கடைகளில் நாளை மறுதினம் கோசாலைகளை தொடங்க போகிறேன். தேர்தலில் வெற்றி பெறுவது என்பது பெரிய விசயம் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களது பிரச்சனைகளை கேட்டு தீர்ப்பதுமே அதன் நோக்கம் ஆகும் என கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை: இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை
வங்கதேசத்தில் சொகுசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 19 பேர் பலி
'தொடர் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுக' :அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்கும் புதிய விதிமுறைகள் வெளியீடு!!
ராஜஸ்தானில் மாட்டு சாணத்தில் இருந்து காகிதம்
15 ஆண்டு பழமையான தனியார் வாகனங்களை அழிக்க விரைவில் கொள்கை
அட்மிஷனை ரத்து செய்துவிட்டு வேறு பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்கள் செலுத்தியரூ.30 கோடி மீட்பு: யுஜிசி தலைவர் பேட்டி
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!
தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!
துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..!!