நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு; புதிய விமான நிலையங்கள் அதானிக்கா என எதிர்க்கட்சிகள் முழக்கம்
2023-02-01@ 12:22:17

டெல்லி: 2023-24-ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அனைவருக்குமான வளர்ச்சி என்ற நோக்கில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட 7 அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியதுவம் வழங்கப்பட்டுள்ளது.
ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிதாவது:
* அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் தரும் திட்டம் ஓராண்டு நீட்டிப்பு
* மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரி.1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு
* கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதிகளில் மேற்கு பத்ரா திட்டத்தை செயல்படுத்த ரூ.5,300 கோடி ஒதுக்கீடு
* 50 விமான நிலையங்கள், துறைமுகங்கள் மேம்படுத்தப்படும், நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்களை அமைக்க திட்டம்
* புதிய விமான நிலையங்கள் அதானிக்காக அமைக்கப்படுகிறதா என எதிர்க்கட்சிகள் முழக்கம்
* மூலதன முதலீடு 3 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடியில் இருந்து 10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
* நாட்டின் ஒட்டுமொத்த ஜி.டி.பி.யில் மூலதன முதலீட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* வரும் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ஒன்றிய அரசு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு
* நாடு முழுவதும் சாலை கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.70,000 கோடி ஒதுக்கீடு
* முக்கியமான 100 போக்குவரத்து திட்டங்களுக்கு ரூ.75,000 கோடி ஒதுக்கீடு
* செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சிறப்பு மையம் அமைக்கப்படும், 3 கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும்
* நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த ரூ.10,000 கோடி ஒதுக்கீடு,
* பல துறைகள் தொடர்பான நிதி பரிவர்த்தனைகளுக்கு நிரந்தர கணக்கு எண் (பான்) பாண் பயன்படுத்துவது அறிமுகப்படுத்தப்படும்
* ரூ.7,000 கோடியில் மின்னணு நீதிமன்றம்களை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது
* நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் ஒட்டுமொத்தமாக எந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்ற நடவடிக்கை
* இயற்கை வைரம் போலவே தன்மைகள் கொண்ட செயற்கை வைரத்தை உருவாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
* பொறியியல் மற்றும் பொறியியல் சார்ந்த தொழில்களில் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்
Tags:
50 புதிய விமான நிலையங்கள் பட்ஜெட்டில் அறிவிப்பு விமான நிலையங்கள் அதானிக்கா எதிர்க்கட்சிகள் முழக்கம்மேலும் செய்திகள்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை தொடங்கியது.! தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ‘பிஎப்ஐ’ மீதான தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை
டெல்லி மதுபானக் கொள்ளை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
திருப்பதி அருகே போலீஸ் ரோந்து வனப்பகுதியில் வெட்டி கடத்திய 9 செம்மரக்கட்டைகள் பறிமுதல்
மகளிர் பிரீமியர் லீக்: எலிமினேட்டர் போட்டியில் 24ம் தேதி மும்பை-உபி வாரியர்ஸ் மோதல்.! முதலிடம் பிடித்த டெல்லி நேரடியாக பைனலுக்கு தகுதி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி