நலிந்தநிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
2023-02-01@ 12:03:25

டெல்லி: 2023-24-ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 5-வது முறையாக ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும்.
ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிதாவது:
* உலகிலேயே அதிக சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது.
* கம்பு சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டம்
* கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறைக்கு ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கீடு
* 8 மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள், மீன் சார்ந்த தொழில் ஈடுபட்டுள்ளார் வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு
* விவசாயத்தில் தொழில் முனைவோரை உருவாக்க வேளாண் ஊக்குவிப்பு நிதி ஒன்று உருவாக்கப்படும்
* வேளாண் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்
* பசுமை எரிசக்தி உற்பத்திக்கு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும்
* 157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும்
* ஐ.சி.எம்.ஆர். பரிசோதனை நிலையங்களை தனியாரும் பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.
* மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருக்கு டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.
* கிராமப்புறங்களில் 1 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
* மோடி ஆட்சியில் இந்தியாவில் தனிநபர் வருமானம் ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.
* தேசிய சிஜிட்டல் நூலகத்தை மாநிலங்கள் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யப்படும்.
* ஏகலைவா பள்ளிகளுக்கு புதிதாக 38,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
* நலிந்தநிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்
* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.79,000 கோடி ஒதுக்கீடு; பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு கடந்த ஆண்டை விட 66% அதிக ஒதுக்கீடு
* அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்படும், ரூ.10 லட்சம் கோடி என்பது இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 3.3 சதவிகிதமாகும்
மேலும் செய்திகள்
வெறுப்பு பேச்சு முடிவுக்கு வர அரசியலில் மதத்தை பயன்படுத்த கூடாது: உச்ச நீதிமன்றம் அறிவுரை
நாளை மறுநாள் முதல் 1000 மருந்துகள் விலை 11% உயர்கிறது
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே மசோதா நிறைவேற்றம்: வன பாதுகாப்பு திருத்த மசோதா தாக்கல்
வெளிநாடுகளில் இருந்து தமிழ் நாடு என்ஜி ஓக்களுக்கு 3 ஆண்டில் ரூ. 6804 கோடி நிதி: ஒன்றிய அரசு தகவல்
கூகுளுக்கு ரூ. 1,337 கோடி அபராதம்: கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவு
கிரிமினல் வழக்கில் உயர் நீதிமன்ற தடை எதிரொலி லட்சத்தீவு எம்பி முகமது பைசல் தகுதி நீக்கம் வாபஸ்: மக்களவை செயலகம் அறிவிப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!