காவல்துறை பறிமுதல் செய்த 98 வாகனங்கள் ஏலம்
2023-02-01@ 01:33:41

தாம்பரம்: தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதியில், கேட்பாரற்று கிடந்த 98 வாகனங்கள் ரூ.8 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த 97 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு மூன்று சக்கர வாகனம் உள்பட 98 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டன.
இவை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பகிரங்க ஏலம் மூலம் ஸ்க்ரப்-க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு, சட்ட ரீதியான முறையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், நேற்று குரோம்பேட்டை காவல் நிலையத்தில், தாம்பரம் காவல் துணை ஆணையர் அதிவீரபாண்டியன் மற்றும் தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில், மொத்தம் 8 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை
குறும்படங்கள் வாயிலாக போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!!
குஷ்புவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிக்கு ஆபத்து?: 'மோடி' பெயரை விமர்சித்த டிவீட்டை வைரலாக்கிய நெட்டிசன்கள்
அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்
ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் :உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி