விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்
2023-02-01@ 01:32:56

சென்னை: சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த ஒரு பெண் பயணியின் கைப்பையை சோதனை செய்தனர். அதில் தங்க வளையல்கள், தங்க செயின்கள் மற்றும் தங்கப்பசை அடங்கிய பார்சல் இருந்தது. இதேபோல், துபாயிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணியின் உள்ளாடைக்குள் தங்கப்பசை பார்சலை பறிமுதல் செய்தனர். மேலும், இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து, லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஒரு ஆண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு பார்சலில் தங்கப்பசை கண்டுபிடிக்கப்பட்டது.
அதுபோல, சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒரு ஆண் பயணி கால்களில் அணிந்திருந்த ஷூ, சாக்ஸ்களில் தங்கப்பசை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அடுத்தடுத்து 4 விமானங்களில் வந்த ஒரு பெண் பயணி உள்பட 4 பயணிகளிடம் இருந்து, ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்புடைய 2.2 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
காய்கறி லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
அதிக வட்டி தருவதாக 3 ஆயிரம் பேரிடம் ரூ.161 கோடி மோசடி‘அம்ரோ கிங்ஸ்’ நிறுவன இயக்குநர்கள் 3 பேர் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
போதை ஸ்டாம்ப் விற்பனை செய்த 3 பேருக்கு கடுங்காவல் சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காய்கறி லாரியில் கடத்திய 80 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!