SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோயம்பேடு காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நியமனம்

2023-02-01@ 01:29:02

அண்ணாநகர்: தினகரன் செய்தி எதிரொலியால், கோயம்பேடு காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருந்தது. இதனால், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விசாரிப்பதில் தொய்வு ஏற்பட்டது. மேலும், வழக்குகள் பதிவு செய்வதும் தாமதமானது. எனவே, காவல்நிலையத்திற்கு உடனடியாக குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கோயம்பேடு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரை நியமிக்க உத்தரவிட்டார். அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காமேஸ்வரி நேற்று கோயம்பேடு காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்தார். இதையடுத்து, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தங்கள் கோரிக்கையை ஏற்று, ஒரே நாளில், குற்றப்பிரிவு ஆய்வாளரை நியமித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்