ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடியில் கோமா நிலையில் இருந்த காதலன் சாவு
2023-02-01@ 01:27:43

ஆலந்தூர்: சென்னை கடற்கரையில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையம் நோக்கி வந்த மின்சார ரயிலில், கடந்த 26ம் தேதி இரவு உள்ளகரத்தை சேர்ந்த காதல் ஜோடி தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் கைகோர்த்தபடி ரயில் முன் பாய்ந்தனர். இதில், 2 பேரும் தூக்கி எறியப்பட்டதில், காதலி சிம்ரன் (15) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதில், காதலன் இளங்கோ தலையில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
தகவலறிந்த மாம்பலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இளங்கோவனை மீட்டு, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் இளங்கோவிற்கு மூளைச்சாவு ஏற்பட்டு, கோமாவிற்கு சென்றார். இந்நிலையில், நேற்று காலை சிகிச்சை பயனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை அதே மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் உள்ளகரத்தில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
நில அளவர் தேர்வை ஒரே மையத்தில் எழுதிய 700 பேர் தேர்ச்சி முறைகேடு நடந்ததா என விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
கல்லூரியில் சேர்ந்து ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிக்க உதவிட கோரி மெரினா கடற்கரையில் வயலின் வாசித்த மாணவன்: மனிதாபிமானத்துடன் நிதி கொடுத்த போலீஸ்
கொளத்தூரில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம்: ஆடல், பாடல் என பொதுமக்கள் உற்சாகம்
வரலாற்றில் முதன்முறையாக 18.36 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடக்கவில்லை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
புழல் புனித அந்தோணியார் நகரில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு
போதையில் போக்குவரத்து காவலர் மீது கார் மோதிய விவகாரம் குற்றவாளியை கைது செய்யாமல் இருக்க ரூ.27 லட்சம் லஞ்சம்?...உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி