தாயின் ஓய்வூதிய பணம் வராததால் விரக்தி அதிகாரிகள் கண் முன் வாலிபர் தீக்குளிப்பு: போலீசார் விசாரணை
2023-02-01@ 01:22:37

தண்டையார்பேட்டை: தாயின் ஓய்வூதிய பணம் வராததால் விரக்தி அடைந்த மகன் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொருக்குப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (43). இவரது தாய் ரேணுகா (60). சென்னை மாநகராட்சி 4வது மண்டலம், 38வது வார்டில் தூய்மைப்பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றார். இவருக்கு வரவேண்டிய ஓய்வூதிய பணம் இதுவரை வரவில்லை. இதுகுறித்து, மகன் கிருஷ்ணமூர்த்தி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
ஏற்கனவே கிருஷ்ணமூர்த்தி கூலிவேலை செய்வதால் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு வந்தது. இதனால், விரக்தியடைந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி 4வது மண்டல அலுவலகத்திற்கு, பெட்ரோல் பாட்டிலை கொண்டு வந்து தனக்குத்தானே உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்த, ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். அதற்குள் கை, கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் கிருஷ்ணமூர்த்திக்கு தீக்காயம் ஏற்பட்டது.
தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தண்டையார்பேட்டை ஆய்வாளர் வடிவேலன், தீக்காயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற அறிவிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது
இன்ஃபுளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து நாளை மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
10,000 சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக இன்புளூயன்சா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி