காவிரியின் குறுக்கே தண்ணீர் எடுக்க கர்நாடகா அரசுக்கு தடை விதிக்க வேண்டும்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு
2023-02-01@ 00:39:18

புதுடெல்லி: காவிரியின் குறுக்கே சட்ட விரோதமாக கர்நாடகா அரசு தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதர்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்து மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,‘‘கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகர குடிநீருக்காக காவிரியில் இருந்து நீரை முறைகேடாக கர்நாடகா அரசு எடுத்து வருகிறது.
இதுகுறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவும், கண்காணிப்பை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும். இதுபோன்று சட்ட விரோதமாக காவிரியில் இருந்து நீர் எடுப்பதற்கு கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உடனடியாக தடை விதிக்க வேண்டும். ஏனெனில் நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்னதாக தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த இடைக்கால மனு குறித்து உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரணை மேற்கொள்ளும் என தெரியவருகிறது.
மேலும் செய்திகள்
தீவிரவாத வழக்குகள் உள்பட இம்ரான் கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன்: லாகூர் உயர்நீதிமன்றம் வழங்கியது
பஞ்சாப்பில் போலீசால் தேடப்படும் அம்ரித்பால்சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: பல்வேறு படங்களை வெளியிட்டு தேடுதல் வேட்டை
ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சமாதானம்
3வது முறையாக விசாரணைக்கு ஆஜர்கவிதாவின் செல்போன்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு
மக்களவையில் விவாதமின்றி துணைமானிய கோரிக்கை நிறைவேற்றம்
புதிதாக 699 பேருக்கு கொரோனா: மேலும் 2 பேர் உயிரிழப்பு
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!