ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன்
2023-02-01@ 00:38:11

திருமலை: ஆந்திர மாநில தலைநகராக விசாகப்பட்டினம் விரைவில் செயல்பட தொடங்கும் என்று முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்தார். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் அடுத்த மாதம் மார்ச் 3,4ம் தேதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக, நேற்று டெல்லியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தனி தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திராவிற்கு என தலைநகர் இல்லாமல் இருந்தது.
மாநில பிரிவினைக்கு பிறகு நடந்த தேர்தலில் சந்திரபாபு முதல்வராக பதவியேற்ற பிறகு அனைத்து மாவட்ட மக்களுக்கு ஏற்ப மத்தியில் இருக்கும் விதமாக குண்டூர் மற்றும் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை இணைத்து அமராவதி தலைநகர் ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்தார். அதற்கான பணிகள் நடைபெற்று 34 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்பட்டது. பிறகு நடந்த பொதுத்தேர்தலில் எனது தலைமையிலான அரசு பதவியேற்றது. ஆந்திராவின் தலைநகராக அமராவதி செயல்படுத்தினால் மீண்டும் மாநில பிரிவினைக்கான பிரச்னை ஏற்படும்.
எனவே ராயலசீமா, கடலோர ஆந்திரா, வட ஆந்திர ஆகிய 3 தலைநகர் அமைப்பதாகவும், இதற்காக விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும், கர்னூலை நீதிமன்ற தலைநகராகவும் அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையிலும் 3 தலைநகர் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமராவதி தலைநகருக்காக நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் விரைவில் செயல்பட தொடங்கும். அதன் பிறகு எனது முகாம் அலுவலகத்தை அங்கே மாற்றி சென்று விடுவேன். முதலீட்டாளர்கள் அனைவரும் ஆந்திராவிற்கு வந்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும். ஆந்திராவில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு அதிகளவில் தொழிற்சாலைகளை அமைக்க முதலீடு செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
மேலும் செய்திகள்
எங்கு சென்றாலும் சரக்கு கிடைக்கவில்லை; பீகார் முதல்வர் வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம்!.. குஜராத்தில் இருந்து போதை ஆசாமி மிரட்டல்
திருப்பதி மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தை: பக்தர்கள் அதிர்ச்சி
ராகுல் விஷயத்தில் ஒருங்கிணையும் எதிர்கட்சிகள்; காங்கிரஸ் - ஆம்ஆத்மி கூட்டணியா?.. கெஜ்ரிவால் கருத்தால் டெல்லியில் பரபரப்பு
கொச்சியில் கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது
இன்று அதிகாலை ராஜஸ்தான், அருணாச்சலில் நிலநடுக்கம்
டெல்லி ராஜ்காட்டில் சத்தியாகிரக போராட்டம் எங்கள் குடும்பத்தை தொடர்ந்து அவமானப்படுத்துகிறீர்கள்!.. 32 ஆண்டுக்கு முன் நடந்ததை கூறி பிரியங்கா காந்தி உருக்கம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி