ஜனாதிபதியின் உரைக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு
2023-02-01@ 00:30:33

சென்னை: ஜனாதிபதியின் உரை குறித்து புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் ஜனாதிபதியாக பதிவியேற்றபின் முதல்முறையாக, இவ்வாண்டு முதல் நாடாளுமன்ற, ராஜ்ய சபாவின் கூட்டு கூட்டத்தில் திரவுபதி முர்மு சிறப்புரையாற்றினார். தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதுவரையில் செயல்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். 2047ம் ஆண்டுக்குள் புதிய இந்தியா உருவாக்கப்படும், ஏழ்மையற்ற நாடு, நவீன கட்டமைப்பை நோக்கி நகர்தல், அனைவருக்குமான வளர்ச்சி, ஏழ்மை ஒழிப்பு வார்த்தையாக இல்லாமல் செயல்படுத்தப்படுதல், பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5ம் இடம், விவசாயிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் என்று மோடி அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பாராட்டி உரைத்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசின் அனைத்து திட்டங்களும் நவீனத்துவத்தின் மூலம் மக்களை அணுகுவதால் அவை நாட்டின் கடைகோடி மக்களையும் சென்றடைவது மக்களாட்சியின் மகத்துவத்தை உணர்த்துகிறது. ஜனாதிபதியின்இந்த சிறப்புமிக்க உரையை வாழ்த்தி வரவேற்கிறேன்.
மேலும் செய்திகள்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேறியது... மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
'மனசாட்சியை உறங்க வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது' ...ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதலமைச்சர் மீது பொறாமையுடனும் அரசியல் காழ்புணர்ச்சியுடனும் பழனிசாமி அறிக்கை வெளியிடுகிறார் : அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்
பட்டாசு ஆலைகளில் அடிக்கடி நிகழும் வெடி விபத்துகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்!!
சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் நீக்கம்: சரத்குமார் அறிவிப்பு
பட்டாசு ஆலைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!