தேசிய கீதம் அவமதிப்பு எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்
2023-02-01@ 00:28:28

நாமக்கல்: நாமக்கல் அருகே பொம்மைக்குட்டை மேட்டில், கடந்த 28ம்தேதி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவின் இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது மேடையின் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, நாமக்கல் ஆயுதப்படை எஸ்எஸ்ஐ சிவப்பிரகாசம்(47) எழுந்து நிற்காமல், சேரில் உட்கார்ந்தபடியே செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து தேசிய கீதத்தை அவமரியாதை செய்த எஸ்எஸ்ஐ சிவபிரகாசத்தை, மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
பொள்ளாச்சியில் இருந்து சேலத்திற்கு இளநீர் வரத்து அதிகரிப்பு: தினமும் 100 டன் வருகிறது
குளச்சலில் கேரை மீன்கள் சீசன் தொடக்கம்: குறைவாக கிடைத்ததால் மீனவர்கள் கவலை
ஸ்ரீமுஷ்ணம் அருகே குடிநீர், கழிவறை வசதி கேட்டு அரசு பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல்
காலமுறை ஊதியம் வழங்க கோரி ஊட்டியில் பூங்கா ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கோடியக்கரை சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் தொடர்ந்து அதிகரிப்பு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!