கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா தமிழ்நாட்டு பக்தர்கள் 2,500 பேருக்கு அனுமதி: பிப். 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
2023-02-01@ 00:28:19

ராமேஸ்வரம்: கச்சத்தீவில் மார்ச் முதல் வாரம் நடைபெறவுள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க, தமிழ்நாட்டில் இருந்து சுமார் 2,500 பக்தர்கள் படகில் செல்கின்றனர். இலங்கை, கச்சத்தீவில் மார்ச் 3 மற்றும் 4ம் தேதிகளில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெறுகிறது. மார்ச் 3ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கி இரண்டு நாட்கள் நடைபெறும். விழாவில் பங்கேற்க இலங்கை நெடுந்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3,500 பக்தர்களுக்கு இலங்கை அரசால் அனுமதி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து ராமேஸ்வரம் வேர்கொட்டு புனித ஜோசப் சர்ச் பங்குத் தந்தையும், கச்சத்தீவு திருவிழா ஒருங்கிணைப்பாளருமான பாதிரியார் தேவசகாயம் கூறுகையில், ‘‘புனித அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 2,500 பக்தர்கள் கச்சத்தீவு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. பக்தர்கள் பயணிப்பதற்கு 60 விசைப்படகுகள் மற்றும் 15 நாட்டுப் படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் பெயர்கள் பதிவு செய்ய பிப். 3ம் தேதி சர்ச் வளாகத்தில் விண்ணப்பம் வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன் 10ம் தேதிக்குள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். காவல்நிலையத்தில் சான்றும், அரசு ஊழியர்கள் அவர்களது உயரதிகாரிகளிடமிருந்து ஆட்சேபமின்மை சான்றும் பெற்று வழங்கவேண்டும்’’ என்றார்.
Tags:
Kachchathivu Antoniyar Temple Festival Tamil Nadu Devotees 2 500 permission Feb. Apply within 10 கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா தமிழ்நாட்டு பக்தர்கள் 2 500 பேரு அனுமதி பிப். 10க்குள் விண்ணப்பிக்கமேலும் செய்திகள்
பொள்ளாச்சியில் இருந்து சேலத்திற்கு இளநீர் வரத்து அதிகரிப்பு: தினமும் 100 டன் வருகிறது
குளச்சலில் கேரை மீன்கள் சீசன் தொடக்கம்: குறைவாக கிடைத்ததால் மீனவர்கள் கவலை
ஸ்ரீமுஷ்ணம் அருகே குடிநீர், கழிவறை வசதி கேட்டு அரசு பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல்
காலமுறை ஊதியம் வழங்க கோரி ஊட்டியில் பூங்கா ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கோடியக்கரை சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் தொடர்ந்து அதிகரிப்பு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!