காவல் நிலையம் முன் அமர்ந்து கொண்டு ‘ஹூக்கா’ புகைத்து ‘ரீல்’ வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
2023-01-31@ 18:40:41

ஹபூர்: உத்தரபிரதேசத்தில் காவல் நிலையம் முன்பு அமர்ந்து ‘ஹூக்கா’ புகைத்துக் கொண்டிருந்ததை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டம் ஹபீஸ்பூர் காவல் நிலையத்திற்கு எதிரே அதேபகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், போதை வஸ்துவான ‘ஹூக்கா’ புகைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அதனை வீடியோவாக எடுத்து சமூக ஊடக தளங்களிலும் ரீல் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
இந்த ரீல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் தேடிவந்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஹபீஸ்பூர் காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்து கொண்டு, ஹூக்காவை புகைப்பது போன்று ரீல் வீடியோ எடுத்து அதனை வெளியிட்ட வாலிபரை கைது செய்துள்ளோம். அந்த நபர் வீடியோ எடுக்கும் போது போலீசாரின் கண்ணில் படவில்லை. தற்போது அந்த வீடியோவை அவரே வெளியிட்டதால் சிக்கிக் கொண்டார்’ என்றனர்.
மேலும் செய்திகள்
உலகம் முழுவதும் ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாட்டால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொள்முதலில் சுணக்கம்: அடுத்தாண்டு மக்களவை தேர்தலால் கூடுதல் நிதி ஒதுக்கீடு
எங்கு சென்றாலும் சரக்கு கிடைக்கவில்லை; பீகார் முதல்வர் வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம்!.. குஜராத்தில் இருந்து போதை ஆசாமி மிரட்டல்
திருப்பதி மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தை: பக்தர்கள் அதிர்ச்சி
ராகுல் விஷயத்தில் ஒருங்கிணையும் எதிர்கட்சிகள்; காங்கிரஸ் - ஆம்ஆத்மி கூட்டணியா?.. கெஜ்ரிவால் கருத்தால் டெல்லியில் பரபரப்பு
கொச்சியில் கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது
இன்று அதிகாலை ராஜஸ்தான், அருணாச்சலில் நிலநடுக்கம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி