தற்கொலை படை மூலம் தாக்குதல்: பாகிஸ்தான் மசூதி குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 90ஆக உயர்வு..!!
2023-01-31@ 11:54:51

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. அப்போது, திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் ஒருபகுதி சரிந்து இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். குண்டுவெடிப்பில் பலத்த காயம் அடைந்த 150க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயம் அடைந்தோரில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது வரை இந்த தாக்குதலில் சுமார் 90 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் கூறுகின்றனர். தீவிரவாதி ஒருவர் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸ் குடியிருப்புகள் அதிகம் இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதனால் தொழுகையில் ஈடுபட்டிருந்த பல போலீசார் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குண்டுவெடிப்பு குறித்து பாகிஸ்தான் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தனது சகோதரர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தற்கொலை படை தாக்குதலை நடத்தி இருப்பதாக தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் கமாண்டர் உமர் காலித் குரசானி கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
காலநிலை மாற்றம், நுகர்வு கலாச்சாரத்தால் உலகளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 6வது முறையாக பின்லாந்து முதலிடம்.! 125 இடத்தில் இந்தியா
தஜிகிஸ்தான் நாட்டில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்
அமெரிக்கா - தென்கொரியா ராணுவம் தீவிர போர் பயிற்சி: ஒரே நாளில் பல ஏவுகணைகளை சோதித்து வடகொரியா பதிலடி
பலத்த காற்று, வெள்ளத்தால் மிதக்கும் கலிஃபோர்னியா: சுமார் ஒரு லட்சம் வீடுகளில் மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்
ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை: உகாண்டா அரசு அதிரடி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!