SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாடிக்கையாளர்கள் போல் நடித்து மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் 4 சவரன், 5 செல்போன், பணம் பறிப்பு: மர்ம கும்பலுக்கு வலை

2023-01-31@ 01:40:04

பூந்தமல்லி: பூந்தமல்லியில் வாடிக்கையாளர்கள் போல் வந்து, மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் 4 சவரன், 5 செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி சாலையில், தனியாருக்கு சொந்தமான மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு குமார் என்பவர் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார் .

நேற்று முன்தினம் மாலை இந்த மசாஜ் சென்டருக்கு வாடிக்கையாளர்கள் போல் 5 பேர் வந்துள்ளனர். பின்னர், அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி மேனேஜரிடமிருந்து 4 சவரன், பணியில் இருந்த பெண் ஊழியர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம், வாடிக்கையாளர்களின் விலை உயர்ந்த 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மேனேஜர் மற்றும் ஊழியர்கள் இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நகை, பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்தனர். மேலும் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் மசாஜ் சென்டரில் வாடிக்கையாளர்கள் போல் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் செல்போன் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்