15 ஆண்டுகள் பழமையான 9 லட்சம் அரசு வாகனங்கள் ஏப்ரல் 1ம் தேதி நிறுத்தப்படும்: நிதின் கட்கரி அறிவிப்பு
2023-01-31@ 01:13:23

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், ‘‘சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் 15 ஆண்டுக்கு மேற்பட்ட பழமையான 9 லட்சம் அரசு வாகனங்களை நிறுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்பாட்டில் இருந்து நீக்கப்படும். அவைகளுக்கு பதிலாக, மாற்று எரிசக்தியில் இயங்கக் கூடிய புதிய வாகனங்கள் கொண்டு வரப்படும்.
மேலும் எத்தனால், மெத்தனால், பயோ சிஎன்ஜி, பயோ எல்என்ஜி மற்றும் எலக்ட்ரிக் போன்ற மாற்று எரிபொருள் வாகனங்களை ஊக்குவிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார். முன்னதாக, 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை இயக்க கடந்த 2018ல் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதன் அடிப்படையில், பழைய வாகனங்களை நீக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது.
மேலும் செய்திகள்
எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே பிரதமர் மோடியின் புதிய இந்தியா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்
நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட்
ராகுலின் குரலை ஒடுக்க பாஜக சதி; நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம்: அபிஷேக் மனு சிங்வி பேட்டி
ராகுல் காந்தி சிறை, அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
எத்தனை சதி செய்தாலும் ராகுல் காந்தி போராட்டத்தை தொடர்வார்; தொடர்ந்து சண்டை செய்வோம்: காங்கிரஸ் ட்வீட்
சிறை தண்டனை அனுபவித்து வரும் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய்: கணவர் குறித்து உருக்கமான பதிவு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி