பெண் சீடர் பலாத்கார வழக்கு சாமியார் அசாராம் பாபு குற்றவாளி: தண்டனை இன்று அறிவிப்பு
2023-01-31@ 01:07:36

காந்திநகர்: ஆசிரமத்தில் இருந்த பெண் சீடரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் அசாராம் பாபு குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் அசாராம்பாபுவின் ஆசிரமத்தில் இருந்த பெண் சீடரை கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பல முறை சாமியார் அசாராம் பாபு பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2013ல் வழக்கு பதிவு செய்யபட்டது.
வழக்கை விசாரித்த காந்திநகர் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி டிகே சோனி, அசாராம் பாபு குற்றவாளி என்று நேற்று தீர்ப்பளித்தார். மேலும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் சாமியாரின் மனைவி உட்பட 6 பேரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. வழக்கில் அசாராம் பாபுவிற்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும்.
மேலும் செய்திகள்
ராகுலின் குரலை ஒடுக்க பாஜக சதி; நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம்: அபிஷேக் மனு சிங்வி பேட்டி
ராகுல் காந்தி சிறை, அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
எத்தனை சதி செய்தாலும் ராகுல் காந்தி போராட்டத்தை தொடர்வார்; தொடர்ந்து சண்டை செய்வோம்: காங்கிரஸ் ட்வீட்
சிறை தண்டனை அனுபவித்து வரும் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய்: கணவர் குறித்து உருக்கமான பதிவு
ராகுலின் தகுதிநீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமானது; எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் பாஜக: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..!
ஜார்க்கண்டில் வீட்டின் மீது மோதிய கிளைடர் விமானம்: இரண்டு குழந்தைகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்..!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி