ஒரே வழக்கில் இருவேறு தீர்ப்பு: சென்னை ஐகோர்ட்டுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
2023-01-31@ 01:06:50

புதுடெல்லி: ஒரே வழக்கில் வெவ்வேறு விதமான தீர்ப்புகள் வெளியாகி இருப்பது குறித்து உடனடியாக கவனிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து செப்டம்பர் ஐந்தாம் தேதி நீதிமன்றத்தில் நீதிபதிகள் கூறிய முக்கிய விவரங்கள் மட்டும் தீர்ப்பாக வெளியான நிலையில், செப்டம்பர் 7ம் தேதி உயர்நீதிமன்றத்தின் இணையதளத்தில் அது வேறு விதமான தீர்ப்பாக பதிவாகி இருந்தது. இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.
மேற்கண்ட விவகாரம் தொடர்பாக நவம்பர் 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் சீலிடப்பட்ட கவரில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஒரே வழக்கில் இரண்டு வேறு விதமான தீர்ப்புகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி கேட்டுக் கொண்டனர்.
மேலும் செய்திகள்
எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே பிரதமர் மோடியின் புதிய இந்தியா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்
நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட்
ராகுலின் குரலை ஒடுக்க பாஜக சதி; நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம்: அபிஷேக் மனு சிங்வி பேட்டி
ராகுல் காந்தி சிறை, அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
எத்தனை சதி செய்தாலும் ராகுல் காந்தி போராட்டத்தை தொடர்வார்; தொடர்ந்து சண்டை செய்வோம்: காங்கிரஸ் ட்வீட்
சிறை தண்டனை அனுபவித்து வரும் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய்: கணவர் குறித்து உருக்கமான பதிவு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி