தமிழ் தேர்வு விலக்கு கோரிய மனு பிப்.6ல் விசாரணை
2023-01-31@ 01:06:02

புதுடெல்லி: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழித் தேர்வு கட்டாயம் என கடந்த 2016ல் தமிழக அரசு விதிமுறை வகுத்தது. இதை ரத்து செய்யக் கோரியும், மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசாணைக்கு தடை விதிக்க மறுத்து, 2022ம் ஆண்டு வரை மொழிவாரி சிறுபான்மை மாணவர்கள் தமிழ்மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தை நாங்கள் விரிவாக விசாரிக்க விரும்புகிறோம். அதனால் இதுதொடர்பான விசாரணையை வரும் பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். இருப்பினும் 2023ம் ஆண்டு மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு தங்களது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே பிரதமர் மோடியின் புதிய இந்தியா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்
நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட்
ராகுலின் குரலை ஒடுக்க பாஜக சதி; நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம்: அபிஷேக் மனு சிங்வி பேட்டி
ராகுல் காந்தி சிறை, அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
எத்தனை சதி செய்தாலும் ராகுல் காந்தி போராட்டத்தை தொடர்வார்; தொடர்ந்து சண்டை செய்வோம்: காங்கிரஸ் ட்வீட்
சிறை தண்டனை அனுபவித்து வரும் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய்: கணவர் குறித்து உருக்கமான பதிவு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி