திமுக சட்டத்துறையின் லோகோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்
2023-01-31@ 01:01:20

சென்னை: திமுக சட்டத்துறை லச்சினை (லோகோ) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில் திமுக சட்டத்துறைக்கான புதிய இலச்சினை (லோகோ) நேற்று அறிமுகம் செய்து வைத்தார். மேலும், திமுக சட்டத்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ் ஆப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய செயலிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் அறிமுகப்படுத்தப்பட்ட திமுக சட்டத்துறையின் வாட்ஸ் ஆப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய செயலிகள் வழியாக கட்சியின் பணிகள் அனைவருக்கும் சென்றடையும் வகையில், உடனுக்குடன் திமுக சட்டத்துறை வெளியிடும். இந்த நிகழ்ச்சியின்போது திமுக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ எம்.பி, சட்டத்துறை இணை செயலாளர்கள் இ.பரந்தாமன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் துணை செயலாளர்கள் கே.சந்துரு, ஜெ.பச்சையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:
DMK Legal Department Logo Minister Udayanidhi Stalin Introduction திமுக சட்டத்துறை லோகோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம்மேலும் செய்திகள்
கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவையே திரும்பிப் பார்க்க கொண்டாடுவோம்! : தீர்மானம் நிறைவேற்றம்!
ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்க : தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்!!
ரெட் நோட்டீஸ் பட்டியலில் சோக்சி நீக்கம் நண்பனை ஒன்றிய அரசு காப்பாற்றி விட்டது: காங்கிரஸ் கடும் தாக்கு
சொல்லிட்டாங்க...
தமிழக வேளாண் பட்ஜெட்டில் பெரிய திட்டம் இல்லை: எடப்பாடி பேட்டி
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஈரோட்டில் 28ம் தேதி பேரணி: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி