இங்கிலாந்து மீது ஏவுகணை தாக்குதல் ரஷ்ய அதிபர் புடின் மிரட்டல்: இங்கிலாந்து மாஜி பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிர்ச்சி தகவல்
2023-01-31@ 00:57:24

லண்டன்: உக்ரைனை தாக்குவதற்கு முன்பாக ரஷ்ய அதிபர் புடின் எங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்தார் என்ற அதிர்ச்சி தகவலை இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கியது. அப்போது இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். அப்போது தான் ரஷ்யாவில் இருந்து அந்த தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்துப் பேசிய போது தான், புடின் தனக்கு மிரட்டல் விடுப்பதை போரிஸ் உணர்ந்துள்ளார்.
பிபிசியின் புதிய தொடரான புடின் மற்றும் மேற்கு நாடுகள் என்ற தொடருக்கு போரிஸ் பேட்டியளிக்கையில்,‘‘என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது புடின் ஒரு கட்டத்தில் என்னை அச்சுறுத்தத் தொடங்கினார். போரிஸ், நான் உங்களை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் ஒரு ஏவுகணை போதும். அடுத்த ஒரே நிமிடத்தில் என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியும் என்று கூறி என்னை மிரட்டினார்’’ என்றார். போர் தொடங்கியதில் இருந்தே ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகள் எடுத்து உக்ரைனுக்கு முழு ஆதரவு அளித்தவர் போரிஸ் ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் அறிக்கை
காலநிலை மாற்றம், நுகர்வு கலாச்சாரத்தால் உலகளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 6வது முறையாக பின்லாந்து முதலிடம்.! 125 இடத்தில் இந்தியா
தஜிகிஸ்தான் நாட்டில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்
அமெரிக்கா - தென்கொரியா ராணுவம் தீவிர போர் பயிற்சி: ஒரே நாளில் பல ஏவுகணைகளை சோதித்து வடகொரியா பதிலடி
பலத்த காற்று, வெள்ளத்தால் மிதக்கும் கலிஃபோர்னியா: சுமார் ஒரு லட்சம் வீடுகளில் மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!