ஆஸி.யில் காலிஸ்தான் வாக்கெடுப்பில் மோதல்: நடவடிக்கை எடுக்க இந்தியா கோரிக்கை
2023-01-31@ 00:56:34

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் அமைப்பினர் நடத்திய வாக்கெடுப்பில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சீக்கியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் இந்து கோயில்கள் மீதான காலிஸ்தான் அமைப்பின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி இந்தியா தரப்பில் ஏற்கனவே ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பெடரேஷன் சதுக்கத்தில் சுதந்திரமான பஞ்சாப் கோரும் காலிஸ்தான் அமைப்பினரின் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது காலிஸ்தான் எதிர்ப்பாளர்கள் தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி அங்கு வந்தனர். இதனால் மோதல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த விக்டோரியா போலீசார், இரண்டு குழுவினர்களையும் கலைந்து போக செய்தனர். இதில் சீக்கியர்கள் இருவர் காயமடைந்தனர். மேலும், மோதலில் ஈடுபட்ட பல சீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த மோதல் போக்கு குறித்து கவலை தெரிவித்துள்ள இந்தியா இது தொடர்பாக காலிஸ்தான் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் செய்திகள்
அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் அறிக்கை
காலநிலை மாற்றம், நுகர்வு கலாச்சாரத்தால் உலகளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 6வது முறையாக பின்லாந்து முதலிடம்.! 125 இடத்தில் இந்தியா
தஜிகிஸ்தான் நாட்டில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்
அமெரிக்கா - தென்கொரியா ராணுவம் தீவிர போர் பயிற்சி: ஒரே நாளில் பல ஏவுகணைகளை சோதித்து வடகொரியா பதிலடி
பலத்த காற்று, வெள்ளத்தால் மிதக்கும் கலிஃபோர்னியா: சுமார் ஒரு லட்சம் வீடுகளில் மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!