பணி நியமனத்தில் முறைகேடு சேலம் பெரியார் பல்கலையில் அரசு குழு விசாரணை துவக்கம்: 2 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க ஆணை
2023-01-31@ 00:37:22

ஓமலூர்: சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனம், முறைகேடாக பணியில் சேர்த்தது, முறைகேடாக பதவிகள் வழங்கியது குறித்து அரசு நியமித்த குழுவின் விசாரணை துவங்கி உள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குநர் நியமனத்தில், பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாதது, பல்கலைக்கழக நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ஆகிய பதவிகள் இடஒதுக்கீடு ஆணைப்படி நியமிக்காதது, தமிழ் துறை தலைவர் பெரியசாமி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள், பெரியசாமி கொடுத்துள்ள போலிச்சான்று, தகுதியின்மை ஆகியவை குறித்து அரசுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த விசாரணை குழு அமைத்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி, அரசு இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட குழு நேற்று காலை பல்கலைக்கழகம் வந்து விசாரணையை தொடங்கியது. 2 மாதங்களுக்குள் தங்களது விசாரணை அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். முதற்கட்டமாக ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். தமிழ் துறை தலைவர் பெரியசாமியை விட பலரும் சீனியராக இருக்கும் நிலையில், இவரை ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம் செய்ய பரிந்துரை செய்தது, விதிகளுக்கு புறம்பாக அவரையே ஆட்சிக்குழு உறுப்பினராக 2 முறை நியமித்தது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கும் குழுவில் விதிகளுக்கு புறம்பாக பெரியசாமியை நியமித்தது, பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய நெல்சனை துணைவேந்தரின் உதவியாளராகவும், குழந்தைவேல் என்பவரை முக்கிய பொறுப்பிலும் முறைகேடாக நியமனம் செய்தது உள்ளிட்ட புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது.
Tags:
Appointment Malpractice Salem Periyar University Govt Committee Inquiry பணி நியமன முறைகேடு சேலம் பெரியார் பல்கலை அரசு குழு விசாரணைமேலும் செய்திகள்
திருவிழாக்கள் எதிரொலி; களைகட்டிய திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடு,கோழிகளின் விலை கிடுகிடுவென உயர்வு
தமிழகத்தில் புலப்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட பிரசாந்த் உம்ராவுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின்: ஐகோர்ட் கிளை உத்தரவு
தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஆமை பொறிப்பகத்தில் பொரித்த ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!
வேதாரண்யத்தில் உப்பு பாத்திகளில் தேங்கிய வெள்ளம்: கோடை மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிப்பு
மதுரை மேலூரில் கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது: தனிப்படை போலீஸ் நடவடிக்கை
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!