சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை: 2வது இடத்திற்கு சபலென்கா முன்னேற்றம்.! ஆடவரில் ஜோகோவிச் மீண்டும் நம்பர் 1
2023-01-30@ 15:34:09

மெல்போர்ன்: கிராண்ட்ஸ்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பைனலில், பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரைபகினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் அவர் இன்று வெளியிடப்பட்ட சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசையில், 5வது இடத்தில் இருந்து 3 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தை போலந்தின் இகா ஸ்வியாடெக் தக்க வைத்துள்ளார்.
துனிசியாவின் ஓன்ஸ் ஜபீர் ஒரு இடம் பின்தங்கி 3வது இடத்தையும், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 4, பிரான்சின் கரோலின் கார்சியா 5, அமெரிக்காவின் கோகா காப் 6, கிரீசின் மரியா சக்கரி 7, ரஷ்யாவின் டாரியா கசட்கினா 8, சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக் 9வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஆஸி. ஓபன் பைனலில் தோல்வி அடைந்த எலினா, 15 இடங்கள் முன்னேறி 10வது இடத்தில் உள்ளார். இதேபோல் ஆண்கள் தரவரிசையில் ஆஸி, ஓபனில் பட்டம் வென்ற செர்பியாவின் ஜோகோவிச் 4 இடங்கள் முன்னேறி மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், கிரீசின் சிட்சிபாஸ், நார்வேயின் காஸ்பர் ரூட், ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ் முறையே 2 முதல் 5 இடங்களில் உள்ளனர். ஸ்பெயின் ரபேல் நடால் 4 இடம் சரிந்து 6வது இடத்தில் உள்ளார்.
மேலும் செய்திகள்
மயாமி ஓபன் டென்னிஸ்: பைனலில் ரைபாகினாவுடன் குவித்தோவா பலப்பரீட்சை
ருதுராஜ் அதிரடி ஆட்டம்: சிஎஸ்கே 178 ரன் குவிப்பு
வண்ணமயமான தொடக்க விழா
மியாமி ஓபன் டென்னிஸ்: பைனலுக்கு எலெனா ரைபகினா தகுதி
கோப்பை அறிமுகத்திற்கு ரோகித்சர்மா வராதது ஏன்?
16வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று தொடக்கம்: குஜராத் டைட்டன்ஸ்-சிஎஸ்கே முதல் போட்டியில் மோதல்.! வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!