கடமலைக்குண்டு அருகே மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும்-கிராம மக்கள் கோரிக்கை
2023-01-30@ 14:31:02

வருசநாடு : கடமலைக்குண்டு அருகே குமணந்தொழு ஊராட்சிக்குட்பட்ட சிதம்பரம் விலக்கு மலைக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மயானத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் இறந்தவர்களை புதைக்கும் போது பல்வேறு சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் மயானத்தில் எரியூட்டும் கொட்டகை, தெருவிளக்கு இல்லாததால், மழைக்காலங்களில் இறந்தவர்களை எரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கிராமவாசிகள் கூறுகையில், ‘‘மூன்று தலைமுறையாக சிதம்பரம் விலக்கு பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள மயானத்திற்கு எந்தவித அடிப்படை வசதியும் இதுவரை செய்து தரவில்லை. இதனால் எங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே மயானத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
மேலும் செய்திகள்
காமெடி நடிகர் கோவை குணா மறைவு
பல்லாவரம் நகராட்சி வழக்கு தொடர்பாக ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு விசைத்தறி முதலாளிகளுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்தை
பூந்தமல்லியில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு
தடை செய்யப்பட்டவைகளுக்கு பதிலாக மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகள்: மாவட்ட கலெக்டர் தகவல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!