புதிய தடுப்பு முகாம் அசாமில் திறப்பு: 68 வெளிநாட்டவர்கள் அடைப்பு
2023-01-30@ 02:15:00

கோல்பாரா: அசாமில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பு காவல் முகாம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் அனுமதியின்றி தங்கியுள்ள வெளிநாட்டவர்களை அடைத்து வைக்க அசாம் மாநிலத்தில் கோபால்பாரா உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பு மையங்கள் உள்ளன. இவை அங்குள்ள சிறை வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, அசாமில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2018ல் கோபால்பாரா மாவட்டத்தில் சுமார் 46 கோடி செலவில் 3,000 கைதிகளை தங்க வைக்கும் திறனுடன் பெரிய அளவில் தடுப்பு மையம் கட்டும் பணி தொடங்கியது. இதில் 400 பெண் கைதிகள் தங்கும் வசதியுடன் 15 கட்டிடங்கள் கடந்த 2021ல் கட்டி முடிக்கப்பட்டது.
இந்நிலையில்,இந்த புதிய தடுப்பு முகாமிற்கு சந்தேககத்திற்குரியவர்கள் மற்றும் வெளிநாட்டினர் என அடையாளம் காணப்பட்ட கைதிகளை மாற்றும் பணியை அசாம் முதல் முறையாக தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக 45 ஆண், 21 பெண்கள், ஒரு சிறுமி, ஒரு சிறுவன் உட்பட 68 கைதிகள் புதிய தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த தடுப்பு முகாமிற்கு இடமாற்ற முகாம் என புதிய பெயர் சூட்டப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக் கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்; பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம்..!
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்!!
கோவையில் துப்பாக்கியுடன் கைதான இந்து முன்னணி நிர்வாகியிடம் போலீசார் தீவிர விசாரணை
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர் முகாம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்-முசிறி அருகே பரபரப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!