SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆளுநரை கண்டித்து பாமக போராட்டம்: அன்புமணி அறிவிப்பு

2023-01-30@ 01:34:32

தர்மபுரி: தர்மபுரியில் நேற்று பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பாமக தலைவர் அன்புமணி எம்.பி., கலந்து கொண்டார்.

முன்னதாக அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாடு அரசு மதுவை ஒழிக்க வேண்டும். அல்லது படிப்படியாக குறைக்க வேண்டும். கடந்த ஆட்சியில் சில மதுக்கடைகள் மூடப்பட்டன. அதற்கு காரணம் பாமக தான். ஆன்லைன் சூதாட்டத்தினால் தமிழகத்தில் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதற்கான சட்ட மசோதாவில், ஆளுநர் கையெழுத்திட வேண்டும்.

இல்லையென்றால், பாமக போராட்டம் நடத்தும். எங்களுக்கு இடைத்தேர்தலில் நம்பிக்கை இல்லை. அதனால், யாருக்கும் எந்த பயனுமே இருக்கப் போவதில்லை. பாமகவை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதுதொடர்பாக திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்