பாஜ கவுன்சிலர் மீது கொலை மிரட்டல் வழக்கு
2023-01-30@ 01:26:25

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் போஸ்டர் ஒட்டியவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜ கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சி 14வது வார்டு பாஜ கவுன்சிலராக இருப்பவர் தனபாலன். இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவராகவும் உள்ளார். இவருடைய வார்டுக்கு உட்பட்ட பகுதியான வ.உ.சி. நகரில் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து தரப்படவில்லை.
எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கவுன்சிலர் தனபாலனிடம் அதே பகுதியை சேர்ந்த சுதன் பிரபு மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் தெரிவித்தனர். ஆனால் அதற்கு அவர் முறையான பதிலளிக்கவில்லை. இதையடுத்து, கவுன்சிலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வார்டு பகுதியில் கோரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்களை சுதன் பிரபு மற்றும் அவருடைய நண்பர்கள் நகர் பகுதியில் ஒட்டியுள்ளனர்.
இதையறிந்த கவுன்சிலர் தனபாலன், சுதன் பிரபு மற்றும் அவருடைய நண்பர்கள் போஸ்டர் ஒட்டும் இடத்துக்கு சென்று அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திண்டுக்கல் வடக்கு போலீசில் சுதன் பிரபு புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்தி வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் பாஜ கவுன்சிலர் தனபாலன் மற்றும் உடனிருந்தவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கான வண்ண மலர்களுடன் தேக்கடியில் 15வது மலர் கண்காட்சி
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக தொடங்கியது குருத்தோலை பவனி விழா!
கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் பார்த்தனர்
வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
ரிஷிகளால், வேதங்களால் உருவானது இந்தியா எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை: ஆளுநர் பேச்சு
வேலூர் அருகே மாடு விடும் விழா களத்தில் தடுமாறி ஓடிய காளை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!