லாரி மீது சொகுசு பஸ் மோதி பெண் உள்பட 2 பேர் பலி: 10 பேர் படுகாயம்
2023-01-29@ 18:17:35

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் நள்ளிரவில் மாடு ஏற்றி சென்ற லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண் உட்பட இரண்டு பயணிகள் பலியானார்கள். மேலும் 10-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
சென்னையில் இருந்து நேற்று இரவு கேரள மாநிலத்திற்கு மாடுகளை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழி சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்கத்தில் பயங்கர வேகத்தில் மோதியது.
இதில் லாரியும், பேருந்தும் கடுமையாக சேதமடைந்தன. இதில் பேருந்தில் சென்ற சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த ஆண்டனிதாசன் (58), கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோட்டை சேர்ந்த கமலாபாய் (64) ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பேருந்தை ஓட்டிச் சென்ற தவமணி மற்றும் பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். பின்னர் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சென்னை-திருச்சி நான்கு வழி சாலையில் நடைபெற்றதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி ஆகிய 3 பணிமனைகளை மேம்படுத்த ரூ.1,600 கோடி நிதி ஒதுக்கீடு: 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் விக்டோரியா மஹால் புனரமைப்பு பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் உள்ள 74 ரயில் நிலையங்களில் 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம்: ரயில்ேவ கோட்டம் தகவல்
3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு
அடுத்த இரண்டு ஆண்டுகளில் நீர்நிலைகள், குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடியில் புதுப்பிக்கப்படும்
14500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் 2030க்குள் செயல்படுத்தப்படும்: ரூ.77,000 கோடி நிதி ஒதுக்கீடு
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!