சாணார்பட்டி பகுதியில் பூத்து குலுங்கும் மாம்பூக்கள்: அதிக மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
2023-01-29@ 10:30:00

கோபால்பட்டி: சாணார்பட்டி பகுதியில் மாமரங்களில் மாம்பூக்கள் அதிகம் பூத்துள்ளதால் இந்த ஆண்டு அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட நொச்சிஓடைபட்டி, ஐயாபட்டி, கொரசனம்பட்டி, மணியக்காரன்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சிலுவத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முக்கனிகளில் ஒன்றான மாங்கனி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இங்கு உயர்ந்த வகை மாம்பழங்களான இமாம் பசந்த் அல்போன்சா, பங்கனப்பள்ளி போன்ற ரகங்களும் கிரேப், செந்தூரம் போன்ற ரகங்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்பட்டு மாம்பழங்கள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன, இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இரவு நேரங்களில் அதிகமான பனிப்பொழிவும், பகல் நேரங்களில் நல்ல வெயிலும் அடித்து வருகிறது. இதனால் மாமரங்களில் மாம்பூக்கள் பூக்க துவங்கியுள்ளன. மாம்பூக்கள் அதிகம் பூத்துள்ளதால் இந்த ஆண்டு, சென்ற ஆண்டை காட்டிலும் அதிகளவு மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
மேலும் செய்திகள்
காமெடி நடிகர் கோவை குணா மறைவு
பல்லாவரம் நகராட்சி வழக்கு தொடர்பாக ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு விசைத்தறி முதலாளிகளுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்தை
பூந்தமல்லியில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு
தடை செய்யப்பட்டவைகளுக்கு பதிலாக மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகள்: மாவட்ட கலெக்டர் தகவல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!