தேன் கொள்முதலுக்கான விலையை உயர்த்த வழக்கு: காதி வாரியம் பரிசீலிக்க உத்தரவு
2023-01-29@ 01:50:11

மதுரை: மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க தலைவர் டோரா கிறிஸ்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2017 வரை ஒரு கிலோ தேன் ரூ.130க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதை ரூ.140 ஆக உயர்த்தி தர கோரியதன்பேரில் 2018ல் ரூ.140 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது செலவினங்கள் அதிகரித்துள்ளது. இதனால், கொள்முதல் விலையை ரூ.150 ஆக உயர்த்தி தர வேண்டுமென்பது உற்பத்தியாளர்களின் கோரிக்கை. இதை வலியுறுத்தி சங்க வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தேன் கொள்முதல் விலையை ரூ.150 ஆக உயர்த்தி தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், தேன் கொள்முதல் விலையை ரூ.150 ஆக உயர்த்தி தர வேண்டுமென்ற மனுதாரர் கோரிக்கையை காதி மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரிய தலைமை செயல் அலுவலர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து 8 வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கூறியுள்ளார்.
Tags:
Honey procurement price raising case Khadi Board தேன் கொள்முதல் விலை உயர்த்த வழக்கு காதி வாரியம்மேலும் செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் டிஜிபி, ஐஜி அதிரடி ஆய்வு
கைத்தறி பெட்ஷீட்டில் ஒருபுறம் தோனி மறுபுறம் விராட் கோலி உருவப்படம்: நெசவாளர் அசத்தல்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி பலி: உரிமையாளர் சிறையில் அடைப்பு
செங்கல்பட்டு அருகே புக்கத்துறை - உத்திரமேரூர்சாலையை இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுவதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
திருச்சில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது காவல்துறை வழக்குப்பதிவு
நாங்குநேரி - மேலப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்..!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி