பெரம்பலூர் அருகே உணவில் விஷம் கலந்து இரட்டை பெண் குழந்தைகளை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை
2023-01-29@ 01:48:31

குன்னம்: பெரம்பலூர் அருகே உணவில் விஷம் கலந்து கொடுத்து இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பெண்ணகோணத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (32). துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்த செல்வராசு என்பது மகள் ஜெயா (27)வுக்கும் 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் நிகிதா, நிகிசா உள்ளனர். குழந்தைகளுடன் கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்புதான், பெண்ணகோணத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை இரண்டு குழந்தைகள் படுக்கையில் இறந்து கிடந்தனர். ஜெயா தூக்கில் பிணமாக கிடந்தார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து, நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளுக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்ட, ஜெயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்நிலையில் ஜெயாவின், தந்தை செல்வராஜ் மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Perambalur food poisoning twin girl killing mother suicide பெரம்பலூர் உணவில் விஷம் இரட்டை பெண் குழந்தை கொன்று தாய் தற்கொலைமேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்