SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுவையில் 30, 31ம் தேதிகளில் ஜி20 மாநாட்டுக்காக 5 இடங்களில் 144 தடை

2023-01-29@ 01:47:19

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜி20 மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் வல்லவன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின் ஆட்சியர் வல்லவன் கூறுகையில், ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் மாநாடு, புதுச்சேரியில் வருகிற 30, 31 தேதிகளில் நடைபெறுகிறது. 30ம் தேதி (நாளை) சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகள் மற்றும் இந்திய நாட்டின் சுற்றுச்சூழல், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்துரையாட உள்ளனர்.

மாநாட்டையொட்டி, புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வருகை தடை என்பது தவறான தகவல். 2வது நாள் ஆரோவில்லுக்கு சென்று பல்வேறு பகுதிகளை பிரதிநிதிகள் பார்வையிடுவார்கள். மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த 75 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி விமான நிலையம், அக்கார்டு ஓட்டல், ரெசிடென்சி டவர் ஓட்டல், ரேடிசன் ஓட்டல், சுகன்யா கன்வென்சன் சென்டர் ஆகிய 5 இடங்களில்  இன்று முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்