பவானிசாகர் அருகே நாயை வேட்டையாட துரத்திய சிறுத்தை: வீடியோ வைரல்
2023-01-29@ 01:40:20

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி கல் உடைக்கும் தனியார் கிரசர் உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதியில் நடமாடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிரசர் பகுதியில் ஒரு நாய் காவலுக்கு படுத்திருந்தது. அப்போது அங்கு வந்த சிறுத்தை, நாயை வேட்டையாட துரத்தியது. ஆனால், நாய் வேகமாக ஓடி மயிரிழையில் உயிர் தப்பியது. சிறுத்தை நாயை துரத்திய காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. சிறுத்தை, நாயை துரத்தும் அந்த காட்சி தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து விளாமுண்டி வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஆமை பொறிப்பகத்தில் பொரித்த ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!
வேதாரண்யத்தில் உப்பு பாத்திகளில் தேங்கிய வெள்ளம்: கோடை மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிப்பு
மதுரை மேலூரில் கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது: தனிப்படை போலீஸ் நடவடிக்கை
தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் திருத்தப்பட்ட சுங்கக் கட்டண விவரங்கள் வெளியீடு : ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு அமல்!!
அடையாறு ஆற்றின் மறுசீரமைப்பு பணிக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!