போச்சம்பள்ளி அருகே போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் செலுத்திய வாலிபர்கள்: மயங்கி விழுந்ததால் ஜி.ஹெச்சில் அனுமதி
2023-01-29@ 01:39:43

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து, ஊசி மூலம் நரம்பில் செலுத்திய வாலிபர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே வீரமலை கிராமத்தில் ஒரு கடையின் முன்பு, நேற்று முன்தினம் மாலை, கார் ஒன்று வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 3 வாலிபர்கள், கடைக்காரரிடம் தண்ணீர் கேட்டனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கடைக்காரர் மற்றும் அங்கிருந்தவர்கள், அவர்களை எழுப்ப முயன்றனர். ஆனால், அவர்கள் எழுந்திருக்காததால், 3 பேரையும் அவர்கள் வந்த காரிலேயே ஏற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவர்களை பரிசோதித்த போது, 3 பேரும் போதை மயக்கத்தில் இருப்பது தெரியவந்தது.
தகவலறிந்து போச்சம்பள்ளி போலீசார் வந்து மயக்கம் தெளிந்த மூவரிடமும் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் கல்லாவியைச் சேர்ந்த ஆசின், சுபாஷ், உபேக் என்பது தெரிந்தது. போதைக்கு அடிமையான 3 பேரும், நெடுங்கல் பகுதியில் போதை மாத்திரைகளை வாங்கி தண்ணீரில் கலந்து, அதனை ஊசி மூலம் தங்களின் நரம்பில் செலுத்தி உள்ளனர். அப்போது மூன்று பேருக்கும் போதை தலைக்கேறியுள்ளது. மேலும், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் காரில் வந்து கடையில் தண்ணீர் கேட்ட போது மயங்கி விழுந்தது தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
திருவிழாக்கள் எதிரொலி; களைகட்டிய திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடு,கோழிகளின் விலை கிடுகிடுவென உயர்வு
தமிழகத்தில் புலப்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட பிரசாந்த் உம்ராவுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின்: ஐகோர்ட் கிளை உத்தரவு
தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஆமை பொறிப்பகத்தில் பொரித்த ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!
வேதாரண்யத்தில் உப்பு பாத்திகளில் தேங்கிய வெள்ளம்: கோடை மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிப்பு
மதுரை மேலூரில் கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது: தனிப்படை போலீஸ் நடவடிக்கை
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!