உரிய அனுமதியின்றி நடிகர் ரஜினி பெயர், குரலை பயன்படுத்தினால் நடவடிக்கை: வழக்கு பாயும் என வக்கீல் எச்சரிக்கை
2023-01-29@ 01:13:38

சென்னை: ‘வணிக நோக்கத்திற்காக உரிய அனுமதியின்றி நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என வழக்கறிஞர் சுப்பையா இளம்பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சார்பாக அவரது வழக்கறிஞர் சுப்பையா இளம்பாரதி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகராக உள்ளார். அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் ‘சூப்பர்ஸ்டார்’ என புகழ்ந்து வருகின்றனர். திரையுலகில் அவருக்கு உள்ள ரசிகர் பட்டாளமும், மரியாதையும் அளவிட முடியாதது. எனவே மிகவும் பிரபலமாக உள்ளவர் என்பதால் நடிகர் ரஜினிகாந்த்தின் புகழ், ஆளுமை, பிரபலத்திற்கு அவருக்கு மட்டுமே முழு உரிமை உள்ளது.
பல்வேறு தளங்கள், ஊடகங்கள் மற்றும் தயாரிப்பு உற்பத்தியாளர்கள் வர்த்தக ரீதியாக நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், குரல், புகைப்படம், கேலிச்சித்திரம், கலைப்படம், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கிய புகைப்படம் மற்றும் பிற குணாதிசயங்களை தவறாகப் பயன்படுத்துவதாக எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. சில பொருட்களை, தயாரிப்புகளை பொதுமக்களை வாங்கச் செய்வதற்காகவும் பொதுமக்களை கவர்ந்திழுக்கவும் நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், குரல், குணாதிசயங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடும் வகையில் உள்ளது. எனவே, உரிய அனுமதியின்றி நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், குரல், புகைப்படம் உள்ளிட்டவற்றை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தினால், உரிமைகளை மீறும் அத்தகைய நபர்களுக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Tags:
Without proper permission actor Rajini name voice case flowing lawyer warning உரிய அனுமதியின்றி நடிகர் ரஜினி பெயர் குரல் வழக்கு பாயும் வக்கீல் எச்சரிக்கைமேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்