2024 மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்க்க காங்கிரசை மையமாக வைத்தே எதிர்க்கட்சி கூட்டணி அமையும்: ஜெய்ராம் ரமேஷ் பேட்டி
2023-01-29@ 01:06:50

புதுடெல்லி: ‘வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள எந்த ஒரு எதிர்க்கட்சி கூட்டணிக்கும் மையப் புள்ளியாக காங்கிரஸ் கட்சி இருக்க வேண்டும்’ என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் தலைமை செய்தித் தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்குப் பிறகு, 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியின் ஆணிவேராக காங்கிரஸ் நிச்சயம் இருக்கும் என்றே நம்புகிறேன். ஏனெனில், பாஜவைத் தவிர நாங்கள் மட்டும் தேசிய அளவிலான கட்சியாக உள்ளோம். நாங்கள் பல மாநிலங்களில் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு கிராமத்திலும், பட்டி தொட்டியிலும், நகரத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கிறார்கள். நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் காங்கிரஸ் குடும்பங்களை பார்க்கலாம்.
நாடு முழுவதும் முன்னிலையில் இருக்கும் ஒரே அரசியல் சக்தி காங்கிரஸ் தான். ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை வைத்தோ, வாக்கு சதவீதத்தை வைத்தோ செல்வாக்கை அளவிடுவது மிகவும் குறுகிய கண்ணோட்டம். காங்கிரசின் சித்தாந்தம் அனைவருக்கும் பொதுவானது. எனவே நாங்கள் தான் ஆதாரம். பாஜவை எதிர்க்கும் எந்த ஒரு எதிர்க்கட்சி கூட்டணிக்கும் காங்கிரஸ் தான் மையமாக இருக்க வேண்டும். இந்திய ஒற்றுமை நடைபயணம் காங்கிரசுக்கு புது தெம்பை தந்துள்ளது. யாத்திரைக்கு முந்தைய நிலையை விட இப்போதைய காங்கிரஸ் நிச்சயம் மாறுபட்டது என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
* 2029ல் தனித்து போட்டி?
ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘2029ம் ஆண்டில் அனைத்து மாநிலத்திலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் அளவுக்கு தயாராக வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆனால் இந்த நிலைப்பாடு கட்சிக்கு சாதகமாக இருக்காது என்னும் யதார்த்தத்தையும் நான் புரிந்து கொண்டுள்ளேன்’’ என்றார்.
Tags:
2024 Lok Sabha Elections Congress Opposition Alliance to Oppose BJP Jairam Ramesh Interview 2024 மக்களவை தேர்தல் பாஜவை எதிர்க்க காங்கிரசை எதிர்க்கட்சி கூட்டணி ஜெய்ராம் ரமேஷ் பேட்டிமேலும் செய்திகள்
மகாத்மா காந்தி எந்த பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெறவில்லை: ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் கருத்தால் சர்ச்சை
எம்.பி. பதவி பறிப்பு எதிரொலி.. அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் கெடு!
வழக்குகளில் தண்டனை பெற்ற உடனே எம்.பி., எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!!
2024 மக்களவை தேர்தல் மம்தா பானர்ஜியுடன் குமாரசாமி ஆலோசனை
வாரணாசியில் மோடி அறிவிப்பு 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு
பாஜ, காங்கிரஸ் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி