நியூசிலாந்தில் கனமழை ஏர்போர்ட்டில் வெள்ளம்: நீச்சலடித்து தப்பிய பயணிகள்
2023-01-29@ 01:05:06

வெலிங்டன்: நியூசிலாந்தில் கனமழை பெய்து வருகிறது. அங்கு ஆக்லாந்து ஏர்போர்ட்டில் வெள்ளம் புகுந்ததால் விமான பயணிகள் நீச்சலடித்து தப்பினர். நியூசிலாந்து நாட்டில் பேய் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆக்லாந்து நகரில் நேற்று 3 மணி நேரத்தில் 15 செ.மீ மழை கொட்டியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. உடனடியாக ஆக்லாந்து ஏர்போர்ட் மூடப்பட்டது. அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டன. விமானத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் பலர் நீச்சலடித்து தப்பினர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. கார் மற்றும் தாழ்வான இடங்களில் சிக்கிய 126 பேர் மீட்கப்பட்டனர். இந்த வெள்ளத்தில் இதுவரை 3 பேர் பலியாகி விட்டனர்.
ஒருவரை காணவில்லை. நியூசிலாந்து புதிய பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் வெள்ளம் பாதித்த ஆக்லாந்து நகருக்கு விமானப்படை விமானம் மூலம் சென்று ஆய்வு மேற்கொண்டார். நேற்று பிற்பகல் விமான நிலையத்தில் இருந்து வெள்ளம் அகற்றப்பட்டது. உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் சர்வதேச விமான போக்குவரத்து பற்றிய தகவல் இல்லை. ஏனெனில் ஆக்லாந்து விமான நிலையம் முற்றிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதைகளை சரி செய்ய இன்னும் சில நாட்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஆக்லாந்து ஸ்மார்ட் ஸ்டேடியத்தில் 40 ஆயிரம் பேர் பங்கேற்க இருந்த எல்டன் ஜான் பாடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
Tags:
In New Zealand heavy rain flooding at the airport escaped passengers நியூசிலாந்தில் கனமழை ஏர்போர்ட்டில் வெள்ளம் தப்பிய பயணிகள்மேலும் செய்திகள்
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம்!!
உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார்!!
அமெரிக்காவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 9 பேர் பரிதாப பலி
ஆஸ்திரேலியாவில் இந்தியா- காலிஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்: மேலும் 3 பேர் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!