குட்கா, புகையிலைக்கு நிரந்தர தடை விதிக்க அரசு கொள்கை முடிவெடுத்து தீர்மானம் இயற்ற வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்
2023-01-29@ 01:01:47

சென்னை: குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க அரசு கொள்கை முடிவெடுத்து பேரவையில் தீர்மானம் இயற்றி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. இளைஞர்களின் உழைப்புத்திறனை கெடுத்து, பெரும்பான்மையான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகவும், சமூக குற்றங்களுக்கு அடிப்படையாகவும், சுயகட்டுப்பாடு இழந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு அடித்தளமாகவும், புற்றுநோய் உள்ளிட்ட பிற நோய்களை ஏற்படுத்தி மனிதர்களை செயல்படாத நிலைக்கு தள்ளுவதில் முழுபங்கு வகிக்கும் இதுபோன்ற குட்கா, பான்மசாலா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் தடை செய்வது காலத்தின் கட்டாயம். எனவே, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்கொண்டு, இளைஞர்கள், மாணவர்களிடையே அதிகம் பரவக்கூடிய குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க கொள்கை முடிவெடுத்து, சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திட வேண்டும்.
Tags:
Gutka tobacco permanent ban government policy resolution Sarathkumar குட்கா புகையிலை நிரந்தர தடை விதிக்க அரசு கொள்கை தீர்மானம் சரத்குமார்மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வாசன் வலியுறுத்தல்
கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
பால் உற்பத்தியாளர் கோரிக்கையை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்
பணவீக்கம், விலைவாசி உயர்வு பற்றி பேசாமல் தவிர்க்க நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாரதிய ஜனதா முடக்குகிறது: முகுல் வாஸ்னிக் குற்றச்சாட்டு
அதிமுகவில் நடக்கும் மியூசிக்கல் சேர் போட்டியில் ராமாயணத்தின் வாலியை போல எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார்: டிடிவி.தினகரன் பேட்டி
லட்சக்கணக்கான மாணவர்களின் வேலையிழப்புக்கு ஆளுநரே காரணம்: துரை வைகோ குற்றச்சாட்டு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!